Showing posts with label chennai. Show all posts
Showing posts with label chennai. Show all posts

Saturday, November 12, 2011

‘சிறகு’ பள்ளியில் இளம்பிறை - ஒரு ரிப்போர்ட்



ஆதரவில்லாமல் தெருவில் கையேந்திப் பிழைக்க விடப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக 2003 ஆம் ஆண்டு 'சுயம்' எனும் தொண்டு நிறுவனம் தொடங்கிய பள்ளி - 'சிறகு'. அருகில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளிகளின் குழந்தைகளும் இந்தப் பள்ளியால் பயனடைகின்றனர். ஆவடியில் IAF காலனியையெல்லாம் தாண்டி இருக்கிறது இந்தப் பள்ளி. மொத்தம் 400 பேர் இங்கு கல்வி கற்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இளம்பிறையின் சார்பாக நாங்கள் சென்றது சனிக்கிழமையானதால், 120க்கும் குறைவாகவே குழந்தைகள் இருந்தனர். எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு, நண்பன் சுந்தர் வீட்டில் நாங்கள் 21 பேர் குழுமி, அவனது அம்மா செய்து வைத்திருந்த அருமையான வெஜிடபிள் பிரியாணியை அவசரவசரமாக சுவைத்து விட்டு, அந்தப் பள்ளிக்குச் செல்லவே மதியம் மணி 1.30 ஆகிவிட்டது. அதற்குள் வேறொரு தொண்டு நிறுவனம் நடத்தும் ‘Weekly Feeding Program’ எனப்படும் இலவச மதிய உணவு வழங்குதல் முடிவடைந்து, 4கிலிருந்து 13 வயது வரையிலுள்ள சுமார் 120 குழந்தைகள் அங்கே குழுமியிருந்தனர். அக்குழந்தைகளைப் பார்த்தவுடன் அவர்களது நிலை நமக்குப் புரிந்துவிடுகிறது. அதைப் பற்றி விபரமாக பின் வரும் பத்திகளில் கூறுகிறேன். 

அந்தப் பள்ளியின் நிர்வாகி ‘Binnish’ எங்களை வரவேற்று நிகழ்ச்சிகளை தொடங்க ஏற்பாடுகள் செய்தார். மொத்தம் 8 அறைகள் இந்தப் பள்ளியில் இருக்கிறது. அதில் 5 அறைகள் மிகவும் பழைய நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மூன்று அறைகள் புதிதாக கட்டியிருக்கிறார்கள். எந்த அறையிலும் கரும்பலகை என்ற ஒன்று இருந்ததாக நினைவில் இல்லை. சுவற்றிலேயே ‘சாக்பீஸ்’ கொண்டு எழுதியிருந்தார்கள். மான்டிஸோரி டைப் பள்ளியென்பதால் கரும்பலகை உதவியில்லாமல் ‘சார்ட்’ முறையில் பாடம் நடத்துகிறார்கள்.

முதல் 10 நிமிடத்தில் அடுத்த 150 நிமிடத்தை இந்தப் பள்ளியில் எப்படி பயனுள்ளதாகக் கழிக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்தோம். அனைவருமே சிறுவர்கள் என்பதால் எங்களால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும் அவர்களுடன் பழகி, நட்பாகிவிட்டால் அனைத்தும் சுலபம் என்று நினைத்துக்கொண்டு ஆயத்தமானோம். மதியமாதலால் வெயில் வேறு கொளுத்தியெடுத்துக் கொண்டிருந்தது   காரிடாரில் குழந்தைகள் வரிசையாகக் குழுமியிருக்க, கடவுள் வாழ்த்துப் பாடலுடன் இனிதே ஆரம்பித்தோம். தியான முறையில் அமர்ந்து அவர்கள் சொன்ன மந்திரங்கள் முடிய 10 நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொண்டது. நிலையான கடவுள் வாழ்த்து என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் நல்லது தான். மதசார்பற்ற முறை எங்களை மகிழ்விக்கவே செய்த்தது.

குழந்தைகளை 6 குழுவாகப் பிரித்து குழுவிற்கு எங்களிலிருந்து இரண்டு பேர் விதம், அங்கிருந்த அறைகளை ஆக்கிரமித்துக் கொண்டோம். முதலில் ஒவ்வொரு குழுவிற்கும் கையில் ஒரு வெள்ளைச் 'சார்ட்'டைக் கொடுத்து அவர்கள் குழுவிற்கு பொருத்தமாக பெயர்கள் வைக்கச் சொன்னோம். குழந்தைகளின் கற்பனைத் திறனுக்கு அளவேயில்லை என்பதை இதன் மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம். “ராக்கெட் ராஜா”வில் ஆரம்பித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரை கூற, கடைசியாக 6 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, முறைப்படி மற்ற அணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அந்தப் பெயர்களும், பெயர்க் காரணமும் பின் வருமாறு,

1) Cheetah - அதன் வேகத்திற்காக இந்தப் பெயரைத் தேர்வு செய்ததாகச் சொன்னார்கள்.

2) Ben 12 - 12 பேர் கொண்ட குழு என்பதால் இந்தப் பெயர். அதே போல் Ben10 மக்களைக் காப்பாற்றுவது போல் இவர்களும் நன்றாக படித்து ஏழை மக்களை காப்பாற்றுவார்களாம்.

3) சிறகு குட்டி ஜப்பான் - குட்டி ஜப்பான் என்பது அவர்களது பள்ளியின் கராத்தே க்ரூப் பெயராம்!

4) பதுங்கும் டிராகன், பாயும் புலி - இந்தப் பெயர் வைத்ததற்கு பெரிதாக ஒரு கதையை அவிழ்த்து விட்டார்கள். அதில் நினைவிலிருப்பது நமது தேசிய விலங்கான புலி, நம் நாட்டில் குறைவாக இருக்கிறது. அதை உணர்த்தவே இந்தப் பெயர் என்று ஒரு சிறுவன் சொன்னது

5) Dhoni - உலக்கோப்பையில் இந்தியா எப்படியும் ‘கப்’ அடிக்க வேண்டும் என்ற வெறியினால் இந்தப் பெயராம்!

6) கருணை இல்லம் - அனைத்து உயிரினங்களிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பெயராம்!


பெயர் வைக்கும் வைபவம் நடந்து முடிந்த பின் ‘ஓவியப்போட்டி’ ஆரம்பமானது. எல்லோருக்கும் ஒரு பென்சில், ஒரு குழுவிற்கு மூன்று கலர் பென்சில் டப்பாக்கள், மூன்று அழிப்பான் (Eraser / Rubber) கொடுக்கப்பட்டது. “இதைத்தான் வரைய வேண்டும் என்றில்லை எதை வேண்டுமானாலும் வரையலாம்” என்று சொன்னதால் அந்தக் குழந்தைகளின் கற்பனைத்திறன் எல்லை கடந்து ஓடியது. ‘தேசியக்கொடி’ வழக்கம்போல் இந்தப் பள்ளியிலும் நிறைய வரையப்பட்டது. வீடு, பூந்தொட்டி, இயற்கைக்காட்சி, தேவதை, முட்டையிடும் கடல் ஆமை(!), கிங் ஃபிஷெர் பறவை (நாங்கள் கொடுத்த கலர் பெசில் அட்டைப்படத்தைப் பார்த்து பலர் இதை வரைந்திருந்தனர்), ஒட்டகச்சிவிங்கியாகவும், டினோசராகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மிருகம், திசை காட்டும் காம்பஸ் (!) என்று பல விதமாக வரைந்து தள்ளிவிட்டனர். கடைசியில் பரிசு கொடுப்பதற்காக இந்தப் படங்களைப் பிரிக்க நாங்காள் பெரிதும் சிரமப்பட்டோம். ஓவியப் போட்டியின் போது இரண்டு சிறுமிகள் சாக்லேட் கொடுத்தால்தான் வரைவேன் என்று அடம்பிடிக்க, “சரி முதலில் வரைந்து முடி, தருகிறோம்” என்று சொன்னோம். ஒரு சிறுமி சரியென்று ஆவலாக தலையை ஆட்டி வரைய ஆரம்பிக்க, மற்றொரு சிறுமியோ எனக்கு ரெண்டு சாக்லெட் கொடுத்தால் தான் வரைவேன் என்று டிமேன்ட்ஸை ஏற்றி விட்டது. இரண்டு சாக்லெட்டை வாங்கிக்கொண்டு தான் வரைய ஆரம்பித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்
ஓவியப் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது தான் கவனித்தோம். இரு சிறுவர்கள் எந்த குழுவிலும் இல்லாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். “என்னடா?” என்று பிடித்துக் கேட்டால் “எங்களுக்கு அம்மை போட்டிருக்கிறது” என்று தழும்பைக் காட்டுகிறார்கள். எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. அந்தச் சிறுவர்களை அமைதியாக ஒரு இடத்தில் அமர வைக்கலாம் என்றால் அவர்கள் கேட்பதாக இல்லை. அப்பொழுதுதான் கவனித்தோம் - அந்தப் பள்ளியில் வேலை செய்யும் யாரையும் காணவில்லை. குழந்தைகளை எங்களிடம் விட்டு விட்டு அவர்கள் ஒரு அறையில் ஒதுங்கிக்கொண்டார்கள். Cheetah குழுவிலிருந்த ஒரு மூன்று வயது சிறுவனுக்கோ இருமல் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கிறது. கண்ணிலும், மூக்கிலும் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கிறது. இருமிக்கொண்டே தான் வரைந்த படத்திற்கு கலர் அடிக்கமுடியாமல், கலர் பென்சிலை வைத்துக் கிறுக்கிக் கொண்டிருந்தான்.

படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்
போட்டோ எடுத்துக் கொண்டே வரும்போது தான் கவனித்தோம், ஒரு சிறுவனுக்கு காலில் பெரிய, ஆராத காயம் ஒன்று இருந்தது. ஆனால் அவன் அதை பொருட்படுத்தவேயில்லை. வரைவதிலேயே கண்ணாக இருந்தான். மற்றுமொரு சிறுவனுக்கு பின்மண்டையில் அடிபட்டு கட்டு போடப்பட்டிருந்தது. முதலில் ஒருவன் தள்ளிவிட்டு கீழே விழுந்ததால் அடி என்றான் ஆனால் விசாரித்ததில் தான் தெரிந்தது அவனது பெற்றோர் அடித்ததால் ஏற்பட்ட காயமாம். எது உண்மை என்று தெரியவில்லை. மேலும் பல சிறுவர்களுக்கு உடலெங்கும் சின்னச் சின்னக் காயங்கள், முதுகு முழுவதும் உடைந்த பருக்கள், வாயில் எச்சில் புண்கள், தேமல், அழுக்கு என்று நாங்கள் பார்த்த யாருமே உடல்ரீதியாக நலமாக இல்லை.

ஓவியப் போட்டி முடிந்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைப்பு வழங்கப்பட்டது. அந்தத் தலைப்பிற்கேற்ப அவர்களை தயார் செய்தனர் நண்பர்கள். நடுநடுவே காந்தி, நேரு, அம்பேத்கார், பகத் சிங், நேத்தாஜி, கல்பன சாவ்லா, சச்சின் போன்ற பிரபலங்களை அடையாலம் காணும் போட்டியும் நடந்தது. எந்தப் படத்தைக் காட்டினாலும் அம்பேத்கர் என்றே சொல்லி ஒரு வழியாக சாக்லெட்டை வாங்கிய சிறுவனை மறக்கவே முடியாது. நாங்கள் இந்த முறை செய்த மாபெரும் தவறே "சாக்லேட்" தான். பல சிறுவர்கள் "அண்ணா அண்ணா" என்று பின்னடியே வந்ததும், சிலர் அழுக ஆரம்பித்ததும், ஒரு சிறுமியோ மொட்டை வெயிலில் கிரவுண்டில் படுத்தபடி "சாக்லேட் வேணும்; கொடுக்கவில்லையென்றால் வர மாட்டேன்" என்று அடம்பிடித்ததும்... யப்பா, சமாளிப்பதற்குள் பெரும் பாடாகி விட்டது. அதிலும் ஒரு பொடியன் நாங்கள் இறுதியாகக் கிளம்பும் போது என் வயிற்றில் ஒரு குத்து குத்தி "எனக்கு அந்த பெரிய சாக்லேட் தந்தியா?" என்று கேட்டான்.  

கடைசி ஒரு மணி நேரம் தாங்கள் இதுவரை கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு ஒவ்வொரு குழுவாக வந்து விளக்கிக் காட்டினார்கள். சில சிறுமிகள் அருமையாக பாடிக்கொண்டே நடனமாடினர். ப்ளாஸ்டிக் ஏன் உபயோகிக்கக்கூடாது என்று ஒரு சிறுவன் சொன்னது இன்னமும் என் நினைவில் நிற்கிறது. சென்னை வழக்கு தமிழில் அவ்வளவு விளாவாரியாக யாருமே இதுவரை ப்ளாஸ்டிக்கின் தீமைகளைச் சொன்னதில்லை. ஒருவழியாக அனைவரையும் முக்கால் பாகமாவது திருப்திபடுத்திவிட்டு பரிசுகள் வழங்கினோம். அதிலும் சில குழந்தைகள் தங்களுக்கு பரிசு கிடைக்கவில்லை என்று அழுகையைப் போட்டனர்.

இளம்பிறை சார்பாக இந்தப் பள்ளிக்கு மாதம் 2000ரூ - 3000ரூ வரையான மளிகை செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று தான் முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால் இந்தப் பள்ளிக்கு சென்று வந்த பிறகு முதலில் இவர்களுக்கு மருத்துவ உதவிதான் தேவை என்று தோன்றுகிறது. ஒரே இடத்தில் ஒன்றுக்கொன்றாய் சிறுவர், சிறுமியர் வாழ்கின்றனர். தொற்று வியாதிகள் பரவும் அபாயம் அளவிற்கதிகமாயிருக்கிறது. கொஞ்சம் சுத்தமாக எந்த அழுக்கு அறிகுறியும் இல்லாமல் ஒரு சில குழந்தகள் இருக்கின்றார்கள். விசாரித்ததில் தான் தெரிந்தது அவர்கள் எல்லாம் இந்தப் பள்ளியில் வேலை செய்பவர்களது குழந்தைகளாம்! அவர்களை மட்டும் அவ்வபோது யாராவது ஒருவர் 'வாட்ச்' செய்துகொண்டிருப்பது போலவும் தோன்றியது. மூக்கிலும், கண்ணிலும் நீர் ஓடிக்கொண்டே இருக்கிறது, இறுமி இறுமி முகமே சிவந்து போய்விட்டது அந்தச் சிறுவனுக்கு. சுற்றிப் பார்த்தால் பள்ளி நிர்வாகிகள் யாரும் அருகில் இல்லை. அவர்களை தேடிக் கண்டுபிடித்து இந்த சிறுவனை ஒப்படைத்தால், அடுத்த ஐந்து நிமிடத்தில் மறுபடியும் இறுமிக்கொண்டே ஓடி வந்துவிடுகிறான். அவனைப் பிடித்து படுக்க வைக்க அங்கு ஆள் இல்லை! இளம்பிறை நண்பர்கள் தங்கள் மடியில் அந்தப் பயலைப் படுக்க வைத்தனர்...

எப்படியாவது ஒரு மருத்துவரைப் பிடித்து, மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் ஒன்றிற்கும், அவசர கால உதவிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே எங்கள் அனைவரது எண்ணமும். கண்முன்னே இத்தனைக் குழந்தைகள் உடல்நலக் குறையோடு இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. 'சிறகு' பள்ளி நிவாகிகள் சரியில்லை என்று சொல்லவரவில்லை. அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்கிறார்கள். ஆங்கிலம் வழியில் கல்வி கற்றுத் தருகிறார்கள், சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் திறன் அந்த மாணவர்களுக்கு இருக்கிறது, யோகா கற்றுத் தருகிறார்கள், கராத்தே கற்றுத் தருகிறார்கள், ஹிந்தி கூட கற்றுத் தருகிறார்கள் போலும். ஆனால், மிக முக்கியமான விஷயங்கள் பல இந்தப் பள்ளியில் இல்லை. சுத்தம், சுகாதாரம், நல்ல உடை, ஆரோக்கியமான உணவு, பகிர்ந்துண்ணும் பழக்கம் போன்றவை மிஸ்ஸிங்! பல குழந்தைகளிடம் பிடிவாதம் அதிகமிருக்கிறது. சில குழந்தைகளிடம் முரட்டுத்தனமும் அதிகமிருக்கிறது. மிக முக்கியமாக கையேந்தும் பழக்கத்தை பல குழந்தைகள் இன்னும் விடவில்லை. ஒரு நல்ல விஷயத்திற்காக இந்தப் பள்ளியை தொடங்கியவர்கள், முதலில் இந்தப் பழக்கத்தை இந்தக் குழந்தைகளிடமிருந்து முற்றிலுமாக அழித்திருக்க வேண்டாமா?

பொருள் ரீதியாக, பண ரீதியாக இந்தப் பள்ளிக்கு உதவிகள் தேவை. ஆனால் அதை விட முக்கியமாக மேற்சொன்ன விஷயங்கள் தேவை. 'சுயம்' கவனிக்க...

இளம்பிறையின் சார்பாக 'சிறகு' பள்ளிக்கு வந்த நண்பர்கள் சுந்தர், முத்துராம், ரம்யா ப்ரியா, கணேஷ், குருஷங்கர், குருராகவன், வேலு, நிர்மல், அருண், குணா, சுரேஷ், சதேஷ், ப்ரேம், பரமேஷ், சதீஷ், பாஸ்கர், திரு, ரவீந்திரன், சுப்ரமணி, சக்தி அனைவருக்கும் இளம்பிறையின் சார்பாக அன்பார்ந்த நன்றிகள்.

சென்னை ஆவடியிலோ அதன் அருகிலோ இருக்கும் மருத்துவர்கள் இந்தப் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உதவ நினைத்தால் தயவு செய்து எங்களை ilampirai2010@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். உங்களது தொலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்

- Pradeep-

'சிறகு' பள்ளிக்கு இளம்பிறை உங்களை அன்புடன் வரவேற்க...



எங்களது ‘இளம்பிறை’ அறக்கட்டளையை பற்றி ஏற்கனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அதை பார்த்து எங்களைத் தொடர்ப்பு கொண்ட நண்பர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு முதலில் எங்களது நன்றிகள்.


இளம்பிறை அறக்கட்டளையின் மூலம் நாங்கள் நண்பர்கள் ஒன்று சேர்ந்து எங்களால் முடிந்த உதவிகளை ஏழை மாணவர்களுக்குச் செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ஆவடியில் அமைந்துள்ள ‘சிறகு’ என்னும் பள்ளிக்கு இளம்பிறையின் சார்பாக நாங்கள் உதவ இருக்கிறோம். இந்தப் பள்ளி 2003 ஆம் ஆண்டு ‘சுயம்’ என்னும் அறக்கட்டளையால் நிறுவப்பட்டதாகும். இந்தப் பள்ளி நிறுவப்பட்டதன் முக்கிய காரணமே, பெற்றோர்களால் பிச்சைக்காரர்களாக விடப்பட்ட ஏராளமான ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத் தான். அருகில் உள்ள பொருளாதார வசதியில் மிகவும் குறைந்த 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு இலவச கல்விப்பயன் அடைகிறார்கள்.

பெற்றோர்களிடமிருந்து வந்த கடும் எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து 150க்கும் அதிகமான, வீதியில் பிச்சை எடுக்க விடப்பட்ட குழந்தைகள்  இந்தப் பள்ளியிலேயே தங்கியிருந்து பெரும் பயனடைகின்றனர். இவர்களுக்கு இலவசக் கல்வியுடன் சேர்த்து, உண்ண உணவு, இருக்க இடம் என்று அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளிநாட்களில் அனைவருக்குமே மதிய உணவும் வழங்கப்படுகிறது. பல்வேறு இடங்களிலிருந்து பல உதவிகள் இந்தப் பள்ளிக்கு வந்தாலும், 400 குழந்தைகளுக்கு மேல் என்பதால் இவர்களால் பல செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்பதை நாங்காள் அறிந்து கொண்டோம். அதனால் இளம்பிறையின் சார்பாக, மாத மளிகைச் செலவை மட்டுமாவது ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறோம்.

அதன் பொருட்டு வரும் சனிக்கிழமையன்று (19 March 2011) மதியம் 01 மணிக்கு மேல் இந்தப் பள்ளிக்கு நாங்கள் செல்கிறோம். அங்கு தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டியில் ஆரம்பித்து பல்வேறு போட்டிகளையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும், அறிவுசார் நிகழ்ச்சிகளையும் ஏராளமான பரிசுகளோடு நடத்த இருக்கிறோம். அந்தப் பள்ளியை நடத்தி வரும் ‘சுயம்’ அறக்கட்டளையினருடனும் விவாதிக்க உள்ளோம்.

பதிவுலக நண்பர்களும் இளம்பிறையின் இந்த முயற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தாழ்வன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கலந்து கொள்ளா விரும்பினால்ilampirai2010@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மடலிடவும். மறக்காமல் உங்களது தொலைபேசி எண்ணையும் குறிப்பிடவும். நாங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களைச் சொல்கிறோம்.

என்றும் பதிவுலகின் ஆதரவும், அன்பும் எங்களுக்குத் தேவை.

Day with Gandhiji Home Kids...


Team Members Attended:
  1. Sundaram.S                                   5. Muthu Ram.L                               9.Mohana Priya
  2. Alagarsamy.SM                              6. Ramadoss                                    10.Vishwanath
  3. Ramya Priya.M                              7. Suresh Muruganandam
  4. Gunasundari.D                               8. Elil Nidhi
Event Description:

With the welcoming cool weather in the fine morning , our team “ILAMPIRAI” reached the Nemilichery home by  10.30 AM with a warm welcome by Mr Vaanarsan, wherein the home was a small residential house comprising of nearly 25 kids who vary in their education levels from 1st class to 10th class. Our team has planned a series of activities for entertaining and introduced the activity based learning to the kids for the duration of nearly 2 hours.

The series of activities planned were as follows:
-          Segregation of kids into 4 teams managed by a ILAMPIRAI member for each team.
-          Team Introduction with a guest performance and a logo designed by the kids
-          Quiz activity having following rounds:
a)      Jumbled words
b)      General knowledge round
c)      Test your memory round
-            Announcement of Winners  and distribution of prizes

As per the plan, there was a perfect alignment of the teams according to their education level. Four equal teams were divided and the game started. Kids were more amazing when they were given with a chart and asked to prepare a team name and logo. There was an excellent spirit in them that made them to design their team name and logo in just 10minutes. The team names were as follows:
-          Team A: Super Singer
-          Team B: Siruthai
-          Team C: Super Guys
-          Team D: Tiger
-         
While preparing for the round 1, we thought that the kids would find it difficult to go with the jumbled words but overwhelmed to see the response of the kids in all teams answering to each and every jumble and bagged their points. In the same way the second and third round proceeded with a good response from the kids making us surprising when they answered to the questions even if they took some time.

Last but not the least is the prize distribution, and the winning team Siruthai accompanied by Gunasundari and the runners team Tiger accompanied by Muthuram got their trophies.
Chocolates and stationary set were provided to each and every kid wherein we saw their faces to be happier after receiving it. Notebooks and uniforms were distributed at the end to each and every kid which was the main agenda of our visit.

This visit made all of us happy after seeing the SMILES of the kids.



Written By - Muthuraam

Dental camp @ Siragu School, Avadi


Dental Camp at Siragu Montessori School was one of the prime activities which were planned after Ilampirai’s first visit to Siragu. The major issue we could see in Siragu during our first visit was that the health and hygiene of the children were of a very low standard. It was a first of its kind for Ilampirai to organize such an initiative which required a great support from volunteers and dental college students.

First of all, Ilampirai takes this opportunity to thank the students’ team from Government Dental College who whole-heartedly agreed to be a part of this initiative. The team consisted of around 10-12 students and 1 professor from the Government Dental College. Some new hands joined this time with Ilampirai to volunteer for this service and to strengthen the Ilampirai team. Also, we had the required co-operation from the support staff at the school for organizing this camp.

Ilampirai team reached the school at time and made sure that the required facilities have been done to facilitate the dental camp. Two spacious rooms had been allotted for the check up. The team provided the basic requirements to the doctors like drinking water, water & dettol to sterilize medical equipments and garbage bucket to dump used cotton and other disposable stuff.

The check-up started on a class by class basis starting from the Kindergarten to 8th standard.  A basic check up was done by a panel of students in the first room. Based on their diagnosis, the prescriptions were provided in a slip which was taken to the other panel of doctors in the next room.

The second panel of students examined the children based on the slips that were given to them and were advised on basic cleanliness like gargling water and brushing. The children who were found to have dental problems were asked to visit the dental hospital the next day. The staff available for each class collected the slips from the children.

The students’ team expressed their happiness for being a part of this activity and provided an assurance to support us for such cause. The team started from the school after having their lunch.

In the second part of the day, we had a discussion with Mrs.Uma who is taking care of the Siragu Montessori School. We discussed on how the idea of starting a school for children from begging community came into existence and the various hurdles faced during the process.
Mrs.Uma explained that most of the development activities are taken care by getting loans from banks .The outstanding debt amount is nearly 50 Lakhs and they are trying to repay the loans slowly. She emphasised on the fact that the continuous support to these homes is what inspires them to do more to these needy children.

When inquired about the health & hygiene of the children, she admitted that since the children are coming from a community where medical facilities are scarce, the children are indeed frequently getting ill. She also told that these children are not being given the allopathic medicines unless the situation is worse. In most of the cases, they are practicing the natural way of healing by giving them proper rest. Though this seems to be a measure to avoid side effects due to the medicines, still it can create some serious complications in children.

Ilampirai Team mentioned that they saw a boy begging at road signal. He was one of the students of the school. Uma told with regret that the parents of these children are not allowing them to go to school on weekends and instead they were sending them for begging. She also said that few of the children are very mischievous and they need to be given special care. Some of them go around breaking things and it had become difficult to keep them under control. The discussion gave various insights into the way the school is run and the practical difficulties involved.
Later, we spent the rest of the day with the school children entertaining them. Most of them were able to identify us from our previous visit. They even remembered the team names that they had kept. Each of them expressed their talents like music, dance, karate, etc.., Finally, we distributed biscuits to all the children and started from the school back to our homes.

To sum it up, it was a great first initiative and gave us the inspiration to conduct many more such visits.

The Team!

Written  By - Param